நன்றி பாக்யா வார இதழ் அட்டைப்படத்திற்கு கவிதை கவிஞர் இரா இரவி

நன்றி பாக்யா வார இதழ் !

அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

தலையில் கவலையை
ஏற்றினால் விரைவில்
எலும்புக் கூடாவாய் !

கோட்டை கொத்தளம்
எதுவும் நிரந்தரமன்று
நிலையாமையே வாழ்க்கை !

கயல்விழியால்
கடைக்கண் பார்வையால்
இந்நிலையோ ?

பரிணாம வீழ்ச்சி
மனிதன்
குரங்காகுகின்றான் !

மண்ணிற்கு இரையாகும் உடல்
மனதினில் எதற்கு
ஆணவம் ?

அழகி செய்த மாயமோ
ஆடவன் நிலை
இப்படி ஆனதோ ?

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (29-May-16, 2:00 pm)
பார்வை : 107

மேலே