நன்றி பாக்யா வார இதழ் படத்திற்கு கவிதை கவிஞர் இரா இரவி

நன்றி பாக்யா வார இதழ் !

படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

அம்மா கலங்காதே
அப்பா இல்லாவிடினும்
நான் காப்பாற்றுவேன் !

வேண்டாம் கண்ணீர்
வேண்டுகிறேன் அம்மா
துணையாக இருப்பேன் !

கள்ளம்கபடமற்ற பிஞ்சு
கணவனை இழந்த அன்னைக்கு
தருகின்றது ஆறுதல் !

ஓடிவிட்டார் அப்பா
ஒருபோதும் வருந்தாதேஇருவரும்
உழைப்போம் உயர்வோம் !

பேதலிக்க வேண்டாம்
பெண்ணாய்ப் பிறந்ததற்கு
சாதிப்போம் வா !

நீ அழுதால்
எனக்கும் வரும் அழுகை
வேண்டாம் சோகம் !

குடியால் மாண்ட அப்பா
கண்ணீர் விடுவதால்
வரப்போவதில்லை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (29-May-16, 1:50 pm)
பார்வை : 67

மேலே