மாமா உன் மார்பில் முகம் புதைத்து

என்னங்க என்னங்க
என்னங்க
என்னமா ?
எழுந்திருக்க முடியலிங்க
கை குடுங்க
அவர் எனைதூக்கி உட்காரவைத்தார்
சட்டென்று அவரை கட்டிக்கொண்டேன்
அவரும் எனை கட்டிபிடித்து
முதுகில் தட்டிக்கொடுத்தார்
(தட்டிக்கொடுத்துக்
கொண்டிருந்தார்)
கொஞ்ச நேரம் கழித்து
எனக்கு சமையல் அறையில் வேலை இருக்கிறதடி
என்றார்
என்னங்க
வலிக்குதுங்க
என்ன கட்டிபுடிச்சிக்கிட்டே இருங்க
நீங்க என்ன
கட்டிகிட்டீங்கனா
என் வலி எல்லாம் பறந்து போய்டுங்க
நான் அவரை விடாமல் இன்னும் இருக்கமாக கட்டிக்கொண்டேன்
அவரும் எனை இருக்கி அணைத்துகொண்டார்
நான் இதுதான் சரியான சந்தர்பம் என்று
இடுப்பில் மறைத்து
வைத்திருந்த கத்தியை
மெதுவாய் எடுத்து
சொருகிவிட்டு
இன்னும் இன்னும்
இருக்கமாக
கட்டி அணைத்து கொண்டேன்
அவர் அலறி துடித்து
விடுடி வலிக்கிறது
விடுடி விடுடி என்று கத்தினார்
முடியலடி என்று கதறினார்
நான் அவரை இன்னும் இருக்கமாக என் மார்போடு அணைத்துக்
கொண்டேன்
என் கால்களையும்
அவர் மீது போட்டு
இருக்க கட்டிக்கிட்டேன்
அவர் துடியாய் துடித்து
அழுது விடுடி வலிக்குதுடி
என்னால தாங்கமுடியலடி என்றார்
நான் அவர் அப்படி சொல்லும் பொழுது
மயக்கம் எனை சூழ
அப்பொழுதும்
அவரை விடாமல்
பிடித்துக்கொண்டு
படுக்கையில் விழுந்தேன்
அவர் எனை எழுப்ப முயற்சிக்கிறார்
என் மீது அவர் சாய்ந்து(விழுந்து) கிடந்தார்
எனை முத்தம் கொடுத்து எழுப்பினார்
நான் அவர் நெற்றியில்
முத்தமிட்டேன்
எனை இப்பொழுதாவது விடுடி என்றார்.
நான் முடியாது என்பது போல் தலையை ஆட்டினேன்
அவர் வலுக்காட்டாயமாக
என் கைகளை விடுத்தார்
என் கைகள்
இருபக்கம் போய் விழுந்து
காற்றில் தொங்கலாடின...
கடினப்பட்டு
கால்களின்
முறுக்கை எடுத்து விட்டு
கால்களை விலக்கினார்
கால்கள் துடித்தன..
நான் அவர் கையை பிடித்துக்கொண்டேன்
அவர் நகர
நான் கட்டிலில் இருந்து விழமுற்பட்டேன்
அவர் எனை பிடித்து மீண்டும் படுக்க வைத்தார்
என்னில் இருந்து வெளிப்பட்டு நின்றார்
என்னில் விலகிபோன உடைகளை சரிசெய்தார்
எனை திட்டி தீர்த்தார்
மார்பில் சொருகிய கத்தியை இழுத்து இழுத்து பார்த்தார்
இரத்தம் தான் கொப்பளித்தது
எனை குப்புற திருப்பிப்போட்டு பார்த்தார்
மார்பில் குத்திய கத்தி
நெஞ்சை கிழித்துகொண்டு
ஊடுருவி முதுகில் வெளிப்பட்டிருப்பதை
அழுகையை அவரால்
கட்டுப்படுத்த முடியவில்லை
மார்பில் அடித்துக்கொண்டு அழுகிறார்
நெஞ்சில்
எனை சாய்த்துகொண்டு
அழுகிறார்
மாமா
வலிக்குது மாமா
என்ன ஏன் கட்டிபிடிச்சிகல
போதும்டி என்னால
தாங்கமுடியாதுடி
மாமா எனக்காக எல்லாம் பண்ணியிருக்கியே
மாமா
நான் என் மாமாவை
கட்டிக்கொண்டு
அவர் மார்பில் தலைபுதைத்து
தடவிவிட்டுக்கொண்டே
ஒன்றும் இல்லை மாமா
என்று சொல்லிக்கொண்டே
கண் அயர்ந்தேன்
~ பிரபாவதி வீரமுத்து