ஏமாற்றம்…

உறவாய் எண்ணிய காக்கையாரே
உமது குணமது மாறியதே,
சிறுவர் கையில் பண்டமதைச்
சேர்த்தே பிடுங்கி வந்தீரே,
உறவினர் வரவை உரைப்பதினால்
உயர்வாய் எண்ணி யிருந்தோமே,
பிறப்பில் எமது முன்னோராய்ப்
போற்றிய பெருமையும் பொய்யாச்சே…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Jun-16, 7:22 am)
பார்வை : 202

மேலே