உனை அணைத்திட தான் காத்துகிடக்கிறேன்

எனை வார்த்தையால்
குத்தாதே!

வாளெடுத்து குத்திவிடு
குத்திவிட்டு மருந்தும் போட்டுவிடு


வார்த்தைக்கு மருந்தே கிடையாது
மரணம் தான்
(நீ வார்த்தையை முடிக்கும் முன்
மரணித்திருப்பேன்)

நீ தந்த பரிசென்பேன்
என் காயத்தை
வலி கூட சுகமாக இருக்கிறது
காரணம் நின் கையால் தானே குத்துபட்டேன்
யாவையும் இழக்கிறேன்
என்னையும் இழக்கிறேன்
உன் விரல்களை மட்டும் பிடித்துக் கொண்டேன்
***************************

முதல் முறையாக உடல் தூக்கி வாரி போடுகிறது
ஏனெனில்
உடலை உயிர் ஏற்கவில்லை.....

மறக்கிறதோ?!

****************************

மீண்டும் வாய் கோணிக்கிறது
இழுப்பு வருகிறது
கை கால்கள் எதையோ
தேடி துடிக்கிறது
வாய் பேச முடியாமல்
நுரையை தப்புகிறது
நீ எதை தேடுகிறாய்
சாவியையா!
இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த உயிர்
இறக்க சித்தமாகிறது
நீ எதையும் தேடவேண்டாம்
வா என்னருகில்
இருக அணைத்து
எனை இறக்கவிடு

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (1-Jun-16, 7:46 am)
பார்வை : 235

மேலே