வைகறை
![](https://eluthu.com/images/loading.gif)
வையக மாந்தர் வசந்தம் உண்ண
=வைகறை பானையில் வெளிச்சப் பொங்கல்
வைக்குது இயற்கை. வழியுது அங்கே
=வனப்பாய் மேகம். வரமெனக் கொண்டு
கைகளில் அள்ளிக் கனிச்சுவைக் உண்டு
=களிப்புற வென்று கதிரவ அழகு
நெய்யென உருகும் நேர்த்தி யிலிந்த
=நிலமது செழிக்கும் நிலையுணர் வோமே!
*மெய்யன் நடராஜ்