ஓ தாத்தா தாத்தா
ஓ.. தாத்தா.. தாத்தா..
என்னருமைத் தாத்தா..
பனிக்கூழ் குச்சி வாங்கித் தா!
பச்சைக் கலரில் தெரியுது பார்!
ஓ. பேராண்டி . பேராண்டி..
வாங்கித் தர ஆசைதான் – நான்
வங்கிக்குப் போறேன் வரியா நீ...
காசு எடுத்து கடைக்குப் போவோம்!
பிடிச்சதை எல்லாம் வாங்கிக்கோ!
சளி பிடிக்காமலே பாத்துக்கோ!
கோபத்துடன் உன் அம்மா கேட்டிடுவாள்,
கோள்சொல்லி என்னைக் காட்டிக் கொடுத்திடாதே!