திருமணம் மற்றும் திருமண வாழ்த்துக் கவிதைகள் பக்கம் 06 --முஹம்மத் ஸர்பான்

சிந்திடும் கண்ணீர் கூட அன்பின்
புரிதலில் முகம் காட்டுமானால்
நீயும் அவளும் வாழும் வாழ்க்கை
கூட எழுதப்படாத கவிஞனின் காவியமே!

முத்துக்கள் எடுக்கும் கடலை விட
அன்புகள் நிறைந்த பேரனாந்த
வாழ்க்கையே பெறுமதியானது

கடல் நீரில் விளையும் உப்பை போல்
அவளில் நீயும் உன்னில் அவளும்
வாழும் நாளெல்லாம் நிழலாய் தோன்றினால்
வேதங்களும் உன்னை யாசிக்கும்

வெண்ணிலவாக அவளிருக்க
இரு நிறைந்த வானாக நீயும்
மழை பொழியும் மேகமாய் அவளிருக்க
குடை பிடியா மரமாக நீயும்
ரசனையில் வாழ்ந்திட அன்பே ஆயுதம்

வாழ்க்கை அழகானது தான்
ஆனால் அந்த வாழ்க்கை கூட
உம் பெயரை இணைத்துச் சொல்லிட
ஒற்றை நொடியில் மரணம் வாங்கும்
உடலும் உயிராய் வாழ்ந்திடல் செல்வம்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (12-Jun-16, 5:20 am)
பார்வை : 918

மேலே