காத்திருப்பேன்

ஆத்தங்கரை ஓரத்திலே
அரசமர அடிவாரத்திலே
உன்ன பார்க்க
உச்சி வெயிலுல
நின்னேனடி புள்ள..................

நெனச்சத சொல்ல
நீ வரும் பாதைய
வச்சக்கண்ணு வாங்காமத்தான்
பார்த்தேன்டி புள்ள.................

நேரந்தான் நகர்ந்து நகர்ந்து
போகுதடி..............
போரவர சனமெல்லாம்
என்ன தான
ஏறிட்டு பாக்குதடி..................

மணி ஏழு எட்ட
தாண்டிதான் போகுதடி................
ஏன்டி புள்ள
உன்ன இன்னும்
காணுமடி..................

நான் நெனச்சத
அசரீரி உன்
காதில் சொல்லிடுச்சாடி..............

காதல் சொல்ல
காலையில் இருந்து
கால் கடுக்க
நிக்குறேன்டி புள்ள................

காலையில் இருந்து
காத்திருந்தவன்
காலம் முழுதும்
காத்திருப்பேன்டி..................

ஒரு முறையாவது
உன்னிடம் என்
காதலை சொல்ல...................

எழுதியவர் : புகழ்விழி (14-Jun-16, 1:25 pm)
Tanglish : kaathirupen
பார்வை : 520

மேலே