களங்க ஒலி
* மலர்களில்
மல்லிப்பூவவள் ;
ஆம்
மல்லியானவளால்
மல்லிக்கழகு..!
* ராகங்களில்
எட்டாம் ஸ்ருதி ;
ஆம்
ஏழிசை கடந்ததால்
ஸ்ருதிக்கழகு..!
* என்றும்
குலமகள் சூடும்
மல்லிப்பூ;
இதோ ...
நட்சத்திர விடுதியில்
வேசிகளுக்கும் ..!
* வேசியும்
பெண்தானே;
பேராசை கொன்றிட
இயலாமையின்போது ..!
ஆயினும்
ஏனோ
நாற்றமெடுக்கிறது
மல்லிப்பூ ...
அன்று
அறியாமல்
நேசித்தவனுக்கு;
இன்றும்
இலக்கை நோக்கிய
நடைபாதையில்..!