அவனுக்கு தெரிந்தது

அவளிடம் ஏராளமான சொற்கள் இருந்தன
அவளுள் பெருந்தீ கனன்று கொண்டிருக்கும் ஒரு காடு இருந்தது
அவளிடம் நீலம் பாவித்த கடல் இருந்தது
அவளிடம் ஆதித் தாயின் அன்பின் பெருஞ்சுனை இருந்தது
அவளை எழுதிய அவனிடமோ
ஒரு வட்ட நிலவும்
சற்றே மேடிட்ட மார்பும் மட்டுமே இருந்தன.

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (19-Jun-16, 3:20 pm)
பார்வை : 239

மேலே