நாமாகப் பேசிக் கொள்வதில்லை

நாமாகப் பேசிக் கொள்வதில்லை
இங்கே இருள்..
அங்கே ஒளி..
நீகண்ட ஒளியால்..
நான் பார்க்க
உணவில்லா இடத்தில் -உன்
உதிரம் தந்த திடத்தில்
உடலும் மனமும் வளம்பெற..
கருவில் சேய் நானும்
உருவில் தாய் நீயும்
உணர்வுகளாய் ஊமைகளாய்..
உலகம் அறியாது
நாமாகப் பேசிக் கொள்வதில்லை
நமக்காக பேசிக் கொள்கிறோம்
உருவத்தை துறந்து..
உள்ளத்தைப் பார்க்கும்
ஆகச்சிறந்த அன்போடு..
-moorthi

எழுதியவர் : moorthi (24-Jun-16, 7:35 pm)
பார்வை : 79

மேலே