ஸ்வாதி

அத்துணை பேர் இருந்தும்
அனாதையான ரயில் நிலையம்..
ரத்தம் தெறித்த மகள்
யாரோ
தாழ்த்தப்பட்ட இனமோ
இருந்தால்
வந்திருப்பார்கள்
சிறுபான்மை நலத்துறை
ஆறுதல் சொல்லி இருப்பார்கள் அமைச்சர்கள்
போராட்டம் வழுத்திருக்கும்

ரத்தம் தெறித்தவள்
முன்னேறிய வகுப்பு
முன்னேறாத நாடு
இன்னும் விடை தெரியாமல்
கேட்பார் இல்லாமல் கிடக்கிறாள்
முன்னேறிய மகள் ...!!!

எழுதியவர் : அருண்வாலி (25-Jun-16, 6:21 pm)
பார்வை : 185

மேலே