முதல் அத்தியாயம்

பிரம்மனே காதல் கொண்டு
உருவாக்கிய உயிர் - நீ
நான் ஏன் உன்னை காதலிக்க கூடாது ???

காதலே உன்னைக்கண்டு
காதலுறும் பொழுது
எங்கே சென்று முறையிட
என் காதலை ???

என் காதலை உன்னிடம்
சொல்ல நினைத்து
தோற்கும்போதெல்லாம்
சந்தோஷத்தில் திளைக்கின்றேன் !!!

உன் - " இல்லை " - என்ற
சொல்லில் என் காதல் இறந்துவிடவில்லை என்பதால் !

கல்லூரிக்கு சென்று பயிலாத
காதல் கலையை ஒருநொடியில்
எனக்கு உணர்த்திவிட்டாய் !

** என் இருதயத்தில் துளிர்ந்த
காதல் என் இருவிழி தனில்
வளர்வதை -" நீ " உணரவில்லையா **

எனஉரைத்த....

உன் இதழுக்கு அன்பு பரிசாக
நான் உன் இதழில் என் இதழ்
பதித்ததுதான் நம் காதலின்
முதல் அத்தியாயம் !!

அதில் இறுதிவரை நீதான் நிறைந்திருப்பாய் !!!!

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (28-Jun-16, 12:37 pm)
பார்வை : 377

மேலே