பஞ்சமே தஞ்சம்

பார்க்கும் இடமெங்கும்
நடக்கும் தூரமெங்கும்
வளம் செழித்த
பரந்து விரிந்தப் பூமியில்
பருவ மழைப் பொய்த்துப் போனது...
பசுமையும் பறந்துப் போனதே......
வெயிலின்
வெப்பத்தில் குடையே எரிந்தது...
வீட்டின் உலைகள்
எரியவே இல்லை......
உதிரம் கூட விற்றிடுவான்
விதை மணிகளை விற்கவே மாட்டான்...
அதனையும் விற்றானே...
தண்ணீரின் வறட்சியில்......
மேடையில் பேசுவர்களுக்கு
தன் வயிறு காய்ந்தால் தான் தெரியும்...
நிலத்தில் பயிர் காய்ந்ததின் நிலைமை ......
திறந்து விடுங்கள்...
திறந்து விடுங்கள்...
இப்படி பேசத்தான் தெரியும்...
தண்ணீரும் வந்தது விவசாயிக்கு
விழிகளிலிருந்து...
தண்ணீர் வரவே இல்லை
விவசாயத்திற்கு......
விளை நிலங்களை
வீடுகளாக்கினான்...
அவன் வாழ இல்லை
எவனோ?... வாழ......
பெரும் வளர்ச்சி தான்
கட்டிடங்களுக்கு
விதைத்தவனுக்கு அல்ல......
தண்ணீர் இல்லை...
விதைகள் இல்லை...
நிலமும் இல்லை...
எதுவும் நிலையென்று அமையாது
போராட்டத்துடன்
வாழ்கின்ற இவனிடம்
பஞ்சமே தஞ்சமானது......