பாக்யா அட்டைப்படத்திற்கு கவிதை கவிஞர் இரா இரவி

பாக்யா அட்டைப்படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா .இரவி !

அதற்குள் அவளுக்கு நரையா ?
அவளை உற்று நோக்கியதும் தெரிந்தது !
கூந்தல் அல்ல அருவி என்பது !

கண்கள் வழி கவிதைக் கொட்டும்
கன்னிப்பெண் இடப்புறம் !
குன்றிலிருந்து கொட்டும் அருவியோ
குமரியின் தலையிலிருந்து வலப்புறம் !

குளித்து முடித்து குமரி
கொள்ளையடிக்கிறாள் உள்ளதை !
குளிக்கும் குமரியோ
கவனம் ஈர்க்கிறாள் !

கருங்கூந்தல் வெண்மை அருவியானது
தொழில் நுட்பத்தின் நுட்பத்தால் !

அமர்ந்தாலும் அழகு
நின்றாலும் அழகு
நடந்தாலும் அழகு
மொத்தத்தில் அழகோ அழகு !
--

.

--

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (4-Jul-16, 5:32 pm)
பார்வை : 52

மேலே