ஒரு கவிதை எழுத ஆசை

ஒரு கவிதை எழுத
ஆசை.....
உன் கார் குழலின்
கருப்பு மை தனை
கொஞ்சம் கடன் வாங்கி ..
உன் கருப்பு பொட்டு
தனை தலைப்பாய் இட்டு..
உன் கண்கள் இரண்டை கொண்டு
உலகை கண்டு .....
உன் மூக்கின் நுனியில்
மூச்சு தனை கடன் வாங்கி....
உன் செவ்விதழின்
வரிகளை வசனமாக்கி....
உன் வெண் சங்கு கழுத்து தனை
வெள்ளை காகிதமாக்கி.....
உன் கன்னம் இரண்டில்
வண்ணம் குழைத்து....
உன் மார்பின் மீது
கொஞ்சம் உறங்கி....
உன் கைகள் இரண்டை
பிடித்து கொண்டு
பத்து விரலில்
முளைத்த குட்டி நகங்களைப் பற்றி ....
உன் பிஞ்சு பாதம்
நடக்க
பூமி புனிதம் அடையும் இரகசியத்தை ....
செல்ல சிரிப்பில்
பல வெள்ளை மனதை
கொள்ளை கொண்ட அழகை கண்டு ...
குட்டி தேவதையே உன்னை பற்றி
ஒரு கவி எழுத கோடி ஆசைக் கண்மணியே....

எழுதியவர் : கிரிஜா.தி (7-Jul-16, 12:54 pm)
பார்வை : 1877

மேலே