பாற்கடலும் பார்க்கும் கடலும்

பாற்கடலும் அது சூழ்ந்த வைகுண்டமும்
தத்தம் பெருமையை உந்தன்
தண்மை பொருந்திய
கண்களில் உள்ள
கண்ணிமையின் அழகினில்
நிறைந்த பெண்மையில் இழக்கும்

நம்மிருவரும் தோள் சேர்ந்து
நடந்து வரும் தோரணையில்
சொர்க்கத்தின் தோரணை வாயிலும்
பொறாமை கொள்ளும்
நம் இன்பத்தை கண்டு

எழுதியவர் : சதிஷ் குமார் தங்கசாமி (20-Jul-16, 5:06 pm)
பார்வை : 75

மேலே