தாய்மை வெல்லும்…
தாயும்,
தாயாக்கியவனும் இல்லாமல்
தவிக்கும் பிள்ளைகள்..
தயார்செய்கிறது காலம்
தமக்கையை,
தன்னலமில்லாத் தாயாய்-
சின்னப் பிள்ளைக்குக்
கிடைத்துவிட்டாள்
சிறப்பான தாய்..
சமுதாயமே,
இயன்றால் உதவு
இல்லை
எட்டிச் செல்,
ஏளனம் செய்யாதே..
தாய் இல்லையெனிலும்
தாய்மை வாழும் என்றும்…!