தாய்மை வெல்லும்…

தாயும்,
தாயாக்கியவனும் இல்லாமல்
தவிக்கும் பிள்ளைகள்..

தயார்செய்கிறது காலம்
தமக்கையை,
தன்னலமில்லாத் தாயாய்-
சின்னப் பிள்ளைக்குக்
கிடைத்துவிட்டாள்
சிறப்பான தாய்..

சமுதாயமே,
இயன்றால் உதவு
இல்லை
எட்டிச் செல்,
ஏளனம் செய்யாதே..

தாய் இல்லையெனிலும்
தாய்மை வாழும் என்றும்…!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Jul-16, 6:52 am)
பார்வை : 99

மேலே