ஆனந்த கண்ணீர்
![](https://eluthu.com/images/loading.gif)
அன்புள்ள ரோஜா........
பிறக்கும்போதே
நான் அழுதேன்.
இறந்தபின்
ஊரார் அழுவார்கள்.
ஆனால் நீ.......
பிறக்கும்போதும்
அழவில்லை.
இறந்தபின்
உனக்காய் நாங்களும்
அழவில்லை.
கண்ணீருக்கு
விடைகொடுத்து
புன்னகைக்கு
விருந்து கொடுத்த
உனக்கு.....
நான் என்ன கொடுப்பேன்.
என்
ஆனந்த கண்ணீரை தவிர.............