மணக்கோலம்
அமுதுண்ட ஆனந்தம் தரும் உன் கண்களைக் கண்டெந்தன், கனவுகள் தீர்க்குதடி காதல் பசி,
கலைந்தோடும் மேகத்திரை நீக்கி, நாணம் காட்டும் முழுமதியாய்,
உன் முகமதி கண்டுவிட,
மதிகெட்டு மயங்கிக் கிடக்குதடி,
என்னுள் ஒரு மாய விசை...! புன்னகையும் பொன்னகையும் மிளிர,
உன் விரல் கோர்த்து என் மனம் குளிர,
மணக்கோல நினைவுகளை சுமக்க, காத்துக் கிடக்குதடி என் கைப்பேசியின் காட்சியரங்கம்...!