ஆசுகவி

பத்தாவது தேறி,
பத்தோடொன்று பதினொன்றாகி...
பத்தாம் பசலியல்ல,
என நிரூபித்து...
பன்னிரெண்டில் தோற்று,
ஒட்டுமொத்த கல்விகூடங்களை,
சாடிவிட்டு...
வயது அடிப்படையில்,
பட்டம் பெற...
விண்ணப்பம் வாங்க...
வரிசையில்,
நின்ற பொழுதே
கவிதை எழுதினேன்...

எழுதியவர் : ரமண பாரதி (25-Jun-11, 3:16 pm)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 322

மேலே