சில வினாக்கள்
எந்த ஒரு நந்தவனம்
ஒரு பூவை
வெளியேறச் சொல்லும் ..?
எந்த அன்பு மனம்
ஒரு புன்னகையை
புறந்தள்ளிப் போகும் ..?
எந்த மனதின் ஓரம்
சிந்தனையற்று
சலனமின்றி இருக்கும் ..?
எந்த கடலின் அலைகள்
இங்கு நம் பாதம்
தொட்டுப் போக மறுக்கும் ..?
எந்த எனது கவிதை வரிகள்
எனது இதயத்தின்
ஆழத்திலேயே உறைந்து போகும் ?