கிராமத்து காதலில் அழகோ அழகு

நீண்ட நாட்களின் ....
பின் ஊருக்கு போனேன் ....
என் காதல் பட்டு ....
போனதுபோல்....
நாங்கள் கூடி கதைத்த ....
மரமும் பட்டு போயிருந்தது ....!!!

என்றாலும் .....
நாம் இருவரும் கஸ்ரப்பட்டு ....
மரத்தில் எழுதிய எங்கள் ....
இணைந்த பெயர் மட்டும் .....
அழியாமல் இருந்தது ....
கிராமத்து காதலில் இது ....
அழகோ அழகு .....!!!

^
முதல் காதல் அழிவதில்லை
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (8-Aug-16, 7:38 pm)
பார்வை : 414

மேலே