கலகலப்பாகச் சிரித்துப் பழகுகிறவர்கள் நட்பைவிடக் கூடாது

உலகில் கிடைத்தற்கரியது எதுவென்றால் கலகலப்பாகச் சிரித்துப் பழகுகிறவர் கிடைப்பதுதான். சிலருடன் 5 மணி நேரம் இருந்தாலும், அரைமணி நேரம் கழிந்ததுபோல் இருக்கும். சிலரிடம் அரைமணி நேரம் கழிக்கவே நெளிய வேண்டி வரும்.

ஒன்று நாம் கலகலப்பாக இருக்க வேண்டும்; அல்லது கலகலப்பாக இருப்பவர்-களோடு இருக்க வேண்டும். குழந்தைகளோடு விளையாடிப் பாருங்கள். எப்படிப்பட்ட மன இறுக்கமும் மறைந்து போகும். மனைவியிடம் தோற்றுப் பாருங்கள்; மகிழ்ச்சி அங்கே அலை மோதும். நண்பர்களுக்கு உதவிப் பாருங்கள். உங்களுக்காக எதையும் செய்வர். உறவுகளை மதித்துப் பாருங்கள், உங்கள் சுமையைத் தூக்கிச் சுமப்பர்.

வரட்டுக் கவுரவத்தில் வாழ்க்கையைத் தொலைக்காமல், விட்டுக் கொடுத்து, அனுசரித்து நடந்து பாருங்கள். வந்த சிக்கல்கூட வழியிலே திரும்பிவிடும். கலகலப்பாக இருப்பவர் எவரும் எதையும் எளிதாக எடுத்துக் கொள்வர். மன அழுத்தம் வராமலிருக்க அதுவே மருந்தாகும். ஒருநாளைக்கு ஒரு மணி நேரம் மனம் விட்டுச் சிரிக்கும் வாய்ப்பை உருவாக்குங்கள். உடலும் உள்ளமும் நலமாக இருக்கும்.

எழுதியவர் : செல்வமணி (8-Aug-16, 8:12 pm)
பார்வை : 201

சிறந்த கட்டுரைகள்

புதிய படைப்புகள்

மேலே