என் காதலை
உன்
முகம் கண்டு
நிலா
தன் முகம் மறைத்து கொள்ளும்!
உன்
இதழ் கண்டு
ரோஜா
தன் இதழ் கடிந்து கொள்ளும்!
உன்
கொஞ்சும் மொழி கேட்டு
கிளி
தன் வாய் மூடி கொள்ளும்!
உன்
மென்மையை பார்த்து
புறா
தன் சிறகை ஒடித்து கொள்ளும்!
உன்னை
கண்ட பின்பு
என்
காதலை மறைத்து கொள்ள
என்னால் முடியவில்லையே!!!