என்று தனியுமோ என் சுதந்திர தாகம்

தீண்டாமை ஒழிந்து
சாதி சமயம் உடைந்து
சமத்துவம் பிறந்து
சங்கடங்கள் தீர்ந்து
சத்தியமே நிலைக்கும்
என்று காத்திருந்து காத்திருந்து
ஏங்கி சாகும் எனக்கும்
என் நாட்டு மக்களுக்கும்
என்று தனியுமோ இந்த
சுதந்திர தாகம் !

நூற்றாண்டுகள் அடிமையாய் கிடந்தது
நூறாயிரம் பேர் வாழ்விழந்து
வந்த சுதந்திரம்
அடிமை ஆதிக்கம் கொண்ட
ஆணவக்காரர்களின் கையில் சிக்கி
அரை நொடியில் சிதைந்து
போன எங்கள் சமத்துவ சுதந்திர தாகம்
என்று தனியுமோ
என் திரு நாட்டில் !

பல பேர் உழத்திட அதில்
சில பேர் திளைத்திட அதனால்
பஞ்சத்தின் பிடியில் சிக்கி
பசியின் பினியல் மடியும்
என் நாட்டு உழைப்பாளிகளின்
சுரண்டல் எதிர் சட்ட
சுதந்திர தாகம் என்று
தனியுமோ என் திருநாட்டில் !

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (9-Aug-16, 8:10 pm)
பார்வை : 926

மேலே