இரு உயிர் எங்கே

இரு உயிர்கள் சேர்ந்து
ஒரு உயிர் படைத்தது அந்த
இரு உயிர்கள் தன்
ஒரு உயிர்க்காக
உடம்பில் தெம்பிருக்கும் வரை
உழைத்தது தன் ஒரு
உயிர் உயர !

உழைப்பை பெற்று
உயர்வை கண்ட ஒரு
உயிர் இன்பமாய்
இங்கே !

உழைப்பை தந்து
உடல் இளைத்து
உண்மையான அன்பிற்காக ஏங்கும்
அந்த இரு உயிர் எங்கே !

அனாதை இல்லத்திலா !

பாதி வாழ்க்கையை உன்னுடன்
கழித்த அவர்களின் மீதி
வாழ்க்கையை அவர்களுடன் நீ
இருந்து இன்பமாய் கழிக்க வேண்டாமோ !

பிள்ளைகளே !

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (12-Aug-16, 7:13 pm)
Tanglish : iru uyir engae
பார்வை : 3255

மேலே