இரு உயிர் எங்கே
இரு உயிர்கள் சேர்ந்து
ஒரு உயிர் படைத்தது அந்த
இரு உயிர்கள் தன்
ஒரு உயிர்க்காக
உடம்பில் தெம்பிருக்கும் வரை
உழைத்தது தன் ஒரு
உயிர் உயர !
உழைப்பை பெற்று
உயர்வை கண்ட ஒரு
உயிர் இன்பமாய்
இங்கே !
உழைப்பை தந்து
உடல் இளைத்து
உண்மையான அன்பிற்காக ஏங்கும்
அந்த இரு உயிர் எங்கே !
அனாதை இல்லத்திலா !
பாதி வாழ்க்கையை உன்னுடன்
கழித்த அவர்களின் மீதி
வாழ்க்கையை அவர்களுடன் நீ
இருந்து இன்பமாய் கழிக்க வேண்டாமோ !
பிள்ளைகளே !