சுதந்திரம்

அந்நியர் பிடியிலிருந்து விடுபட்டு

சுதந்திரம் அடைந்தோம்

வருடங்கள் எழுபது இப்போது

நாம் சுதந்திரம் அடைந்து

இன்னும் இந்த கொடிய

ஜாதி-மத பிடியிலிருந்து

நமக்கு எப்போது கிடைக்கும்

சுதந்திரம் ?

அது எப்போதோ அப்போதுதான்

நாம் அடைந்தது பூரண சுதந்திரம்

காத்திருப்போம் அப் பொன்னாள்

எப்போது உதிக்கும் என்று

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (15-Aug-16, 3:28 pm)
Tanglish : suthanthiram
பார்வை : 75

மேலே