சுத்த சுயநலவாதி

வாழும் வகை தெரியாது
வாழும் மனிதர்களைக் கண்டு
வியக்கிறேன் நான்.
தானும் வாழாது
அடுத்தவரையும் வாழ விடாது
வதைக்கும் மனிதர்களைக் கண்டு
கொதித்துப் போகிறேன் நான்.
தன் வீடு தன் சுகம் பேணுபவரை
சுயநலவாதி எனலாம்.
என் உடைமை எனக்கு மட்டும்
என் தேவை என் சுகம்
என்று வாழ்பவரை
சுத்த சுயநலவாதி என்று
பொருமித் தள்ளுகிறேன் நான்,
சுய நியதி என்பதை
முறைப்படுத்தாது
பொது நியதியையும்
பொருட்படுத்தாது
வாழ்பவர் வாழ்ந்து தான்
என்ன பயன்.

எழுதியவர் : சுபா சுந்தர் (17-Aug-16, 10:53 am)
பார்வை : 75

மேலே