காதலே

என் காதலே
என்று நீ வருவாய்
என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன்
எங்கேயும் நகராது
நின்றுக் கொண்டிருக்கிறேன்
என்றோ ஒரு நாள்
எங்கிருந்தோ வந்தாய்
என்னை முத்தமிட்டாய்
எங்கோ மறைந்தாய்
எல்லோரிடமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்
கேள்விக்கு பயந்து
கதிரவன் ஒளிகிறான்
காற்றோ எனை சற்றும்
சீண்ட மறுக்கிறான்
காக்கையிடம் கேட்டேன்
உனக்கேனும் தெரியுமோ?
கடிந்து கொண்டே
பறந்து சென்றான்.
கடைசி வறை
காத்திருப்பேன் காதலே
நீ காலம் தாமதித்தால்
நான் மண்ணோடு மடிந்துபோவேன்
மரம் மழையிடம் அழுதது.

எழுதியவர் : கேசவன் (20-Aug-16, 1:31 pm)
Tanglish : kaathale
பார்வை : 231

சிறந்த கவிதைகள்

மேலே