எழுத்தாளன்

வெடி வைத்து தகர்க்க மலைப்பாறையல்ல - ஆயிரம்
வெடிகுண்டு வேட்டுக்கள் எழுத்தாலே செய்பவன்!
தண்ணீர் ஊற்றி அழிக்க தரைக்கோலமல்ல - ஆயிரம்
தத்துவங்கள் தந்திடுவான் தமிழ் பாலமூடே!
தென்றலோடு விளையாடும் மரக்கிளைகள் போலே
செந்தமிழோடு விளையாடும் இவன் கனவுகள்!
காட்சிப்பிழைகள்.....
இவன் கற்பனைச்சேலையின் நூலிழைகள்......

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (24-Aug-16, 11:32 pm)
Tanglish : eluthaalan
பார்வை : 97

மேலே