பிரியாத வரம் வேண்டும்

ஒரே நேரத்தில் இந்த
உலகம் வந்தோம் ....
நம்மை போல்
நாம் மட்டும் என்றிருந்தோம் ....
உன் முகம் பார்த்து
ஆரம்பித்த காலை பொழுது ...
தொலை பேசி உரையாடல்கள்
இருந்ததுண்டு
தொலைவில் நாம் இருந்ததில்லை .....
குறும்பு செய்து அலைந்த
கல்லூரி காலங்களில்
நம் நட்பை கண்டு இறைவன் கூட
பொறாமை பட்டிருக்க கூடும் ....
சிறு இடைவெளி புரிய வைத்தது
காதல் என்பதை .....
தவறு என்று தள்ளி தள்ளி
நின்றேன் ....
நீ கேட்ட ஒரு கேள்வியில்
தீக்குளித்து நின்றேன்.....
முதல் முதலாய் கண்ணீர்
ததும்பி நின்றன
நம் கண்கள் .....
உன்னை என்றும்
பிரியாத வரம் வேண்டும்
என்று நினைத்து நம்
மனதில் உதித்தது காதல்....