கண்ணீர் துளியில் நனைந்த பக்கங்கள்-பக்கம்-02

கண்ணீர் துளியில் நனைந்த பக்கங்கள்-பக்கம்-02
நிலவிற்கு துணையாய்
எண்ணற்ற விண்மீன்கள்
வானிலே...
என் விடியா இரவிற்கு
துணையாய் என்
தனிமை மட்டுமே
காத்துக்கிடக்குதே....
போர்க்களத்திலே
வாடிய பூவாகவே
நானும்...
எனை வாழவைக்கும்
நீராக என் விழி வழியே
வெள்ளமாய் என்
கண்ணீர்த்துளிகளும்....
ஆயிரம் உறவுகள்
எனை சூழ்ந்திருந்தும்
அன்பெனும் வார்த்தையை
நானும் அறியாமலே
இவ்வுலகின் முன்
நானும் ஒரு அநாதையாய்....
என் மனமும் ஊமையாய்
அழுகையிலே
என் விழிகளும் எனக்காய்
மௌன ராகங்கள்
பாடியதே......
ஆயிரம் கேள்விகள்
என் மனதினுள்ளே
அனைத்திற்கும்
பதிலாய் மௌனமே
அதன் அன்பளிப்பாய்...
கண்ணீரில் நனைந்த
என் பக்கங்களோடு
வலிகளற்ற வாழ்கையை
நானும் தேடியே
என் பயணத்தை
நானும் தொடருகிறேன்....!!