மனதின் மெல்லிய வார்த்தை
நீ என் வாழ்வில் வருவதற்கு முன்பு
நான் ஆசை கொண்டேன் புல்லாங்குழலாக மாற....
ஏனெனில் என் சோகத்தை நினைத்து அழ
இரு கண்கள் போதாததால்........
ஆனால்...............
நீ என் வாழ்வில் வந்த பிறகு
நான் ஆசை கொள்கிறேன் பூவிதழியாக மாற ....
ஏனெனில் என் சந்தோஷத்தை எண்ணி புன்னகை சிந்த
ஒரு இதழ் போதாததால்........