பிள்ளையாரைப் போட்டுடைத்த பெரியார் கைது

பெரியார் பிள்ளையாரைப் போட்டுடைத்தார் என்று குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்...... நீதிபதி, கைது செய்த காவலரிடம்....

இவர் என்ன குற்றம் செய்தார்?

காவலர்/,... இவர் பிள்ளையாரைப் போட்டுடைத்தார்....

நீதிபதி.... பெரியாரிடம்/.. பிள்ளையாரைப் போட்டுடைத்தீர்களா?

பெரியார்... ஆமாம், போட்டுடைத்தேன்..

நீதிபதி... ஏன் அப்படி செய்தீர்கள்?

பெரியார்... கடைவீதிக்குப்போனேன், அங்கு பிள்ளையார் சிலையை விலைக்கு வாங்கினேன்... யாருக்கும் இடையூறு இல்லாமல், தெருஒரமாகப் போட்டுடைத்தேன்...

நீதிபதி... ஒரு மதத்தவர் வணங்கும் கடவுளைப் போட்டுடைப்பது அவர்களது மனதை புன்படுத்தாதா? அது தவறல்லவா?

பெரியார்.... நான் பிள்ளையார் சிலையை வாங்கும்போது, பலர் அதேபோல வாங்கினார்கள்..அவர்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று கேளுங்கள் என்றார்...

நீதிபதி... காவலரிடம்... மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்டார்..

காவலர்.. அவர்களும் போட்டுடைத்தார்கள் என்று கூறினார்...

நீதிபதி... அவர்களை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டார்..

காவலர்.. அவர்கள் கடவுள் உண்டு என்று சொல்லி உடைத்தார்கள்...ஆனால் இவரோ கடவுள் இல்லவே இல்லை என்று சொல்லி உடைத்தார்.. என்று பதிலளித்தார்..

நீதிபதி... இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? கடவுள் இல்லை என்று சொல்பவர் உடைப்பதில் அர்த்தம் உண்டு..கடவுள் உண்டு என்று சொல்பவர் அவர்கள் வணங்கும் கடவுளையே உடைப்பது நியாயமா? என்று சொல்லி... அய்யா நீங்கள் போகலாம் என்றார்...

பெரியார் நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தார்..

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (6-Sep-16, 3:27 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 129

மேலே