பெண்ணின் ஏக்கம்

எனக்காக மட்டுமே நீ வாழு ..என்னை அக்கரையோடு பார்த்துக்கொள் ..என் பாதியானவன் என் பாதி வேலையை பகிர்ந்துக்கொள் என்று நான் கேட்கவில்லை ..என்னிடம் ஒரு 5 நிமிடம் என் விழி பார்த்து விரல் கோர்த்து பேசு ...நானும் உன் தாயும் சண்டை போட்டாலும் அம்மாவோ நானோ சொல்லும் தலையாட்டி பொம்மையாக இல்லாமல் நியாயத்தின் பக்கம் இரு..அங்கே போ இங்கே போ என்று நான் கேட்கவில்லை அருகில் இருக்கும் எதோ ஒரு இடத்திற்கு உன் காய் கோர்த்து நடந்தால் அது போதும் எனக்கு வேற என்ன வேண்டும் ..
#Lovely#

எழுதியவர் : அபி (7-Sep-16, 5:33 pm)
சேர்த்தது : அபி
Tanglish : pennin aekkam
பார்வை : 473

மேலே