போதும்யா இது
அவரு ;; ஏங்க நீங்க ஏன் இன்னும் கவிதை தொகுப்பு போடல
நானு ;;;; நம்ம கவிதையெல்லாம் யாருங்க வெளியிடுவாங்க?
அவரு :::ஏங்க நீங்க வேற பதினைஞ்சாயிரம் கொடுங்க புத்தகம் போட்ரலாம்
நானு ;;யோவ் வாய்ல நல்லா வருது இங்க நெட் பேக் ,சோறுல இருந்து ஓசி இதுல பதினைஞ்சாயிரம் செலவு பண்ணி கவிதை தொகுப்பு போடுவேனா நானு
அவர் ;;ஏங்க கோவப்படறிங்க புத்தகம் போட்டவங்களதான் கவிஞர் னு ஒப்புக்குவாங்க இதுகூட தெரியல உங்களுக்கு
நானு ;; போய்யா மார்க் கொடுத்த மேடையிருக்கு நூறு லைக் இருக்கு அப்பத்திக்கு அப்பவே மூஞ்சி மேல கருத்த சொல்லி திட்ரான் இல்லனா பாராட்டிடுறான். போதும்யா இது.
அவரு ;; அதுவும் சரிதான்ங்க