என்னவனே

கண்களால் காதலை 
பரிமாறும் நாம் 
என்று வார்த்தைகளால் 
பரிமாறிக் கொள்ள 
போகிறோமோ தெரியவில்லை....! 
கண்களால் என்னை 
கைது செய்த நீ 
வார்த்தையாலும் 
வசப்படுத்துவாயா...... 
அல்ல 
மௌனத்தால் கொல்வாயா.....? 
எந்த நிகழ்வும் என் மனதை 
இவ்வளவு பாதித்ததில்லை 
ஆனால் உன் மௌனம் 
என்னை பாடாய் படுத்துகிறது..... 
நீ காதலை சொல்லும் 
அந்த நாளை எண்ணி 
மனதில் உன் நினைவுடன் 
உன் வருகைக்காக காத்திருக்கிறேன்.....!

எழுதியவர் : நித்யஸ்ரீ (13-Sep-16, 10:05 pm)
Tanglish : ennavane
பார்வை : 104

மேலே