ஈவாளா ஏவாள்

பாதையோரத்தில்
பசித்தவன் பிச்சை கேட்கிறான்
உணவுப் பிச்சை !
இவள்
பார்வையோரத்தில்
நான் பிச்சை கேட்கிறேன்
காதல் பிச்சை !
நிக்கல் போட்டால்
வள்ளல் என்று வாழ்த்துகிறான்
பிச்சைக்காரன்
இவள் வள்ளலா கஞ்சளா ?
ஈவாளா இந்த ஏவாள் ?
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Sep-16, 8:35 am)
பார்வை : 247

மேலே