காவேரி பார்வை - தொலையும் மனிதம்
உறக்கம்: 
ஆழ்ந்த உறக்கத்தில் 
அழகான கிறுக்கல்கள் 
ஆங்காங்கே தோரணமாய் 
அதிசயமாய்  தேவதைகள்..!
சேதி : 
களைப்புதீரும் மருந்தெனவே 
கண்ணுறக்கம் கடந்துவர 
காதில்செய்தி  கிழித்ததம்மா 
காவேரியென்று பெயர்சொல்லி ..!
சூழ்ச்சி: 
ஏறி,குளம், கிணறு எல்லாம் 
ஏலம்போட்டு விற்றுவிட்டோம்  ் 
ஆற்றுமணலை கூறும்போட்டு   
ஊற்றுநீரை உறிஞ்சிவிட்டோம்!
மடமை: 
ஈவுயில்லா மனிதனைப்போல் 
இரக்கமற்ற அரக்கர்களாய்
காவிரித்தாயின் காவலுக்கு 
கட்சிசாயல் பூசிவிட்டோம்..!
வெறி: 
கண்டவனெல்லாம் கரையேற 
கருப்புஆடு கூட்டமொன்று 
உடமையெல்லாம் தீயிட்டு 
உரிமைகோரி புறப்படுதாம்..!
காவேரி:  
உத்தமனொருவன் இல்லையென 
உயிரைக்கையில் பிடித்தபடி 
இக்கரைவரவே துடிக்கின்றாள் 
இனமானத்தமிழா எழுகயென்று..!
புரிதல்: 
காடும்,மலையும்,காற்றும் கடலதில் 
கலந்திடும் ஆறுகள்எல்லாம்  
அனைவருக்கும் இங்குசொந்தமடா 
அதிகாரம் எவனுக்குமில்லையடா..!
விவசாயி: 
உலகைக்காத்திடும் விவசாயி 
உணவையூட்டும் உயிர்த்தாயி 
தாயைத்தவிக்க விட்டதனால் 
தண்ணீரென்றே  தவிக்கின்றதோ..?
துஷ்பிரயோகம்: 
அமைதியான வாழ்முறைமறந்து
அக்கினியோடு  போரிட்டால் 
எரிந்துபோகுமுன் எதிர்காலம் 
எதிரியென்றே உன்னினம்சாவும்..!
வரலாறு: 
ஆண்டப்பரம்பரை வரலாறு 
அழிக்கநினைப்பவன் சுக்குநூறு 
வீரம் தமிழ்ப்பால் விளையாட்டு 
விழுந்தால் மார்பின்முகங்காட்டு..! 
வீரம்: 
மார்பில் சுமந்த அம்புகளும் 
மரபை சுமந்த பண்புகளும் 
ஈன்றத் தாயின் பெருமைகளாய்
இன்றும் மண்ணில் இருக்குதடா  
ஆயுதம்:
எதிரியென்னை ஆக்காதே -  
எதிர்த்தப்பகை அது தீராதே.!
அகிம்சையோடு போகுமென்னை 
ஆயுதமெடுக்க வைக்காதே..!
நிதர்சனம் :
காதல்நிறைந்த கலியுகக்காலம் 
கலந்துபோகவோர் இனமெனமாறும் 
மனிதம்மட்டுமே வாழும்போது 
மறையும்விரைவில் பிரிவினை,கேது ..!
 
                    
