உன் ஞாபகம் என்றும் என் நெஞ்சில்

உன் ஞாபகம் என்றும் என் நெஞ்சில்...

உந்தன் மடியினில் தவழ்ந்தேன்
என்னை மறந்தே துயில் கொண்டேன்
உந்தன் கரங்களில் என்னை சீராட்டினாய்
உன் மார்பினில் சாய்த்தே என்
காதோரம் நீயும் தாலாட்டு பாடினாய்
இன்று நடந்தது போல் அனைத்தும்
என் மனதில் தோன்றி மறையுதே.....

என் சிரிப்பினில் மகிழ்ந்தாய்
என்னை அள்ளியே அணைத்தாய்
உன் உதிரத்தை ஊட்டி வளர்த்தாய்
உன் உறவாலே எனக்கு உயிர் கொடுத்தாய்
எண்ணி எண்ணி வியக்கிறேன்
உன்னை தினமும் நினைக்கிறேன்...

உந்தன் கால்களை நான் ஆடும் ஊஞ்சல்
ஆக்கினாய்..
தலையணையாய் உந்தன் தாய்மடி
நீயும் தந்தாய்...
என் உடலுக்கு உருவம் அளித்தாய்
உன் ஞாபகம் என்றும் என் வாழ்விலே
என் காலம் முடிந்தும் நீ வாழ்வாய்
என் நெஞ்சிலே....

எழுதியவர் : அன்புடன் சகி (23-Sep-16, 8:34 pm)
பார்வை : 622

மேலே