காதலில் தெளிவு வேண்டும்

காதலித்தபோது வாழ்வில் இனிமை
மணமான பின்னே கசந்ததேன்
காதலிக்கும் போது வாக்கில்
உண்மை இல்லை என்பது
மணமானபின்னே சில வேளை
கழிந்த பின்னே தெள்ள தெளிவானதாலே ;
காதல் வெறும் விளையாட்டல்ல -அது
திருமண வாழ்விற்கு அஸ்திவாரம்
காதலில் இந்த தெளிவு இருந்தால்
வாழ்வில் என்றும் சுகமே
ஆகாயத்தில் பந்தலிட்டு
காதல் உலா வந்தால்
வானத்தை விட்டு மண்ணை தொடுவது
எப்போது
காதலில் இந்த தெளிவிருந்தால்
காதல் இனிக்கும் மனா வாழ்வும் இனிக்கும்
இனிக்கும் வாழ்வு உள்ள வரை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (26-Sep-16, 4:56 pm)
பார்வை : 64

மேலே