எனக்குள் பெண்மை
சிந்திய சிரிப்பை
அவள் வாரியணைக்கும்
பொழுதுகளில்;
நீட்டிய கைகளில்
அவள் கரம் புதைக்கும்
பொழுதுகளில்;
மழைவிழும் நேரம்
அவள் என் மார்பில் விழும்
பொழுதுகளில்;
காலைச் சூரியனுக்கே
காதல் காட்டி என்
நெஞ்சில் தீமூட்டும்
பொழுதுகளில்;
லேசாக வந்து செல்கிறது
எனக்குள் பெண்மை;