நெஞ்சிலே நீயே என் காதலே

நான் சுவாசிக்கும் எனதுயிர் நீயன்றோ
ஏன் எனை நீயும் பிரிந்து சென்றாய்
விரல் பிடித்து நடக்கும் சிறு வயதினிலே
உனை நானும் தங்கினேன் நெஞ்சினிலே
இருளிலே வாழ்ந்தேன் இருளிலே
ஒரு ஒளி கண்டேன் அது நீயடி
தேடலும் என் தேடலும்
நீயடி எனதன்பே
உன்னோடு நான் வாழ்ந்த நொடிகள் அது - என்
நினைவிலிருந்து அழியாதே
என் வாழ்வில் உனை பிரியும் நொடியை
நரகத்தை போலவே உணருகிறேன்
இதயம் துடிப்பதிங்கே உன் பார்வையினால்
இமைகளை மூடாதே.....
வாழ்விலே என் வாழ்விலே
வானவில் நீயடி
வானவில் என் வானவில்
அதன் வண்ணமும் நீயடி ....

எழுதியவர் : YUTHI BAVA (29-Sep-16, 4:25 pm)
சேர்த்தது : Manjula
பார்வை : 491

மேலே