உள்ளமதில் ஊனம்03

கொடுத்தவன்
கொடுத்தான் அதை
கொண்டவன் அவன் தேவை போக
இல்லாதவனுக்கு கொடுக்கா அவனே
தின்று கொழுத்தான்
இவன் தானோ மடியில் கனமிருந்து
மனதில் கருணையில்லா ஊனம்
கொண்டவன் .........

கண்கள் முழுவதும்
கனவுகள் இருந்தும் மனம் முழுவதும்
பயத்தின் இருள் இருந்து
முயலாதவன் தான்
உடலால் வலிமை கொண்டும்
உள்ளத்தால் ஊனம் கொண்டவன் ...............

அவன் வயிறு நிறைந்ததும்
அரை வயிறாய் இருந்து
அவனை ஆளாக்கிய அன்னை தந்தையை
அனாதையாய் தவிக்க விடுபவன் தான்
அன்பில் ஊனமுற்றவன் !

...............அன்னை ப்ரியன் மணிகண்டன்

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (29-Sep-16, 5:57 pm)
பார்வை : 92

மேலே