தம்பியாய் வளர்த்தேன்

தம்பியாய் வளர்த்தேன் நாயென்று நினையாமல்
தவறி விழுந்திட்டான் நிறைந்திட்டக் கண்மாயில் ​!

​அலறித் துடித்தேன் அழுதபடி நின்றிருந்தேன்
நீச்சலும் அறியாததால் நீந்திட யோசித்தேன் !

வழியின்றி குதித்தேன் தண்ணீரில் தத்தளித்தேன்
இலக்கினை நினைத்தே கலக்கமுடன் நீந்தினேன் !

கையிலிருந்தப் பாத்திரமும் கைகொடுத்து உதவியது
நெருங்கினேன் நடுக்கமுடன் நெஞ்சத்தில் அச்சமின்றி !

மூழ்கிடும் நிலையில் முனகலுடன் பார்த்தது
அணைத்து எடுத்து பாத்திரத்தில் வைத்தேன் !

தலைமேல் தூக்கி களைப்புடன் திரும்பினேன்
​உள்ளம் குளிர்ந்தது உவகையால் துள்ளியது ​!

​பழனி குமார் ​

எழுதியவர் : பழனி குமார் (1-Oct-16, 1:22 pm)
பார்வை : 129

மேலே