ஊட்டி வெண்ணெய் விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

வெண்ணெய் விநாயகன் தான்வினைக ளைநமது
எண்ணம்போல் வேரறுப்பான் எந்நாளும் - கண்போல
நெஞ்சிலே வைத்தே நினைப்போம்; அவன்தாளே
தஞ்சமென்(று) எண்ணித் துதி! 1 *

கண்ணிமைபோல் எண்ணியே காத்திடும் ஏந்தலாம்
வெண்ணெய் விநாயகனை வேண்டியே - திண்ணமாய்
நம்புவோர்க்கு வாழ்வில் நலமே வழங்கிட
தும்பிக்கை யான்துணை நம்பு! 2 *

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Oct-16, 10:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே