வாழ்க்கையின் விளையாட்டு

செருக்கு நிறைந்த பரிகாசன் போலே
உமிழ் நீரை காரி துப்புகிறது
பாவப்பட்ட என் முகத்தில்....

கைதேர்ந்த குத்துச்சண்டை வீரனாகி
துவம்சம் செய்து விடுகிறது
நோஞ்சானான என் உடலை...

கஞ்சனான பகட்டு பணக்காரன் போலே
உதவாத பைசாவை கொடுக்கிறது
பஞ்சத்தில் அடிபட்ட என்னிடம்...

கர்ஜனைகள் பல செய்து சிங்கமாகி
அடித்து தின்ன பார்க்கிறது
சுண்டெலி போன்ற என்னை...

பெரும் புயலாய் உருவாகி
பிய்த்து போட்டுவிட எத்தனிக்கறது
இப்போதே வேர்பிடித்த என்னை....

வல்லவன் ஈடானவனுடன் ஆடும் விளையாட்டில்
என்னையும் சேர்த்துக்கொண்டது வாழ்க்கை.
அதனினும் மேலாக சென்று, அதனையே
ஆண்டிட துடிக்கறது என் நம்பிக்கை.

எழுதியவர் : செந்ஜென் (5-Oct-16, 12:38 pm)
பார்வை : 219

மேலே