என்னவனுக்காக

கண்ணாடியின் முன் ஓர் அரை மணியும்...
அணிகலனில் அக்கறையும் ....
நெற்றியினில் செந்தூரமும் ....
கை வளையின் ஓசைகளும் ....
வண்ணம் மின்னும் விறல் நகங்களும்..
காற்றுடன் கதை பேசும் காதணியும்....
கண் இமையின்மேல் குவியும் கரு மையும்
இதழின் மேல் பொருந்திய நிறச்சாயமும்..
கழுத்தினில்தான் கவி பாடும் பொன் நகையும்...
கவனத்தைத் தான் இழுக்கும் கால்கொலுசும்...
பார்வையினை பதைக்க வைக்கும் பட்டுப்புடவையும்...
வழி பார்த்துத்தான் விழித்திருக்கின்றன......என்னவனுக்காக....!!!!

எழுதியவர் : ஸ்ரீதுர்கா ராஜேந்திரன் (10-Oct-16, 6:17 pm)
பார்வை : 103

மேலே